எண்ணப் பேய் விரட்டல்!
நற்செய்தி மாலை: மாற்கு 5:9-10.
“அவர் அம்மனிதரிடம், “உம் பெயர் என்ன?” என்று கேட்க அவர், “என் பெயர் “இலேகியோன் “, ஏனெனில் நாங்கள் பலர்” என்று சொல்லி, அந்தப் பகுதியிலிருந்து தங்களை அனுப்பிவிட வேண்டாமென்று அவரை வருந்தி வேண்டினார்.”
நற்செய்தி மலர்:
ஒன்றல்ல, நம்மைப் பிடித்த
எண்ணப் பேய்கள், ஒன்றல்ல.
என்றல்ல, என்றே உரைத்து
இழந்தோர் புகழ்தல், என்றல்ல.
நன்றல்ல, பேய்கள் பின்னால்
நாமும் செல்லல், நன்றல்ல.
இன்றல்ல, இப்படி நாளும்
எதிர்ப்போம் தீமை, இன்றல்ல!
ஆமென்.
![நற்செய்தி மாலை's photo.](https://scontent-sin1-1.xx.fbcdn.net/hphotos-xap1/v/t1.0-9/s851x315/11218894_1017059701658165_8165830594326850425_n.jpg?oh=517ebc4bc08c5aaaa6db8a9d7b058ee1&oe=569AC2E3)