உள்ளே வராத உறவுகள்!

உள்ளே வராத உறவுகள்!
நற்செய்தி மாலை: மாற்கு 3:31
“அப்பொழுது அவருடைய தாயும் சகோதரர்களும் வந்து வெளியே நின்று கொண்டு அவரை வரச் சொல்லி ஆள் அனுப்பினார்கள்.”
நற்செய்தி மலர்:
உயர்ந்த நிலையில் இருப்பாரென்றால்,
உறவுகள் யாவும் வீட்டுள் வரும்.
ஊழியன் என்று ஊரில் அலைந்தால்,
உடன் பிறப்பும் வெளியேறும்!
அயர்ந்து துவண்டு போக வேண்டாம்;
ஆண்டவர் நிலையைப் பார்த்திடுவோம்.
அதுதான் நமக்கும் என்றறிந்து,
அவரது பணியைத் தொடர்ந்திடுவோம்!
ஆமென்.

நற்செய்தி மாலை's photo.

Leave a Reply