உள்ளே வராத உறவுகள்!
நற்செய்தி மாலை: மாற்கு 3:31
“அப்பொழுது அவருடைய தாயும் சகோதரர்களும் வந்து வெளியே நின்று கொண்டு அவரை வரச் சொல்லி ஆள் அனுப்பினார்கள்.”
நற்செய்தி மலர்:
உயர்ந்த நிலையில் இருப்பாரென்றால்,
உறவுகள் யாவும் வீட்டுள் வரும்.
ஊழியன் என்று ஊரில் அலைந்தால்,
உடன் பிறப்பும் வெளியேறும்!
அயர்ந்து துவண்டு போக வேண்டாம்;
ஆண்டவர் நிலையைப் பார்த்திடுவோம்.
அதுதான் நமக்கும் என்றறிந்து,
அவரது பணியைத் தொடர்ந்திடுவோம்!
ஆமென்.
![நற்செய்தி மாலை's photo.](https://fbcdn-sphotos-h-a.akamaihd.net/hphotos-ak-xpf1/v/t1.0-9/s851x315/988545_946657268698409_250258960662670098_n.jpg?oh=aaf0b580c909a82d08a5289966f88eb7&oe=560997E2&__gda__=1443380422_6cefca616aed8f5cb84c56f5b60ce157)