இழப்பின் வலி!
இறை மொழி: யோவான் 16:4-6.
4. அந்தக் காலம் வரும்போது நான் இவைகளை உங்களுக்குச் சொன்னேனென்று நீங்கள் நினைக்கும்படி இவைகளை உங்களுக்குச் சொல்லியிருக்கிறேன்; நான் உங்களுடனேகூட இருந்தபடியினால் ஆரம்பத்திலே இவைகளை உங்களுக்குச் சொல்லவில்லை.
5. இப்பொழுது நான் என்னை அனுப்பினவரிடத்திற்குப் போகிறேன்; எங்கே போகிறீரென்று உங்களில் ஒருவனும் என்னைக் கேட்கவில்லை.
6. ஆனாலும் நான் இவைகளை உங்களுக்குச் சொன்னதினால் உங்கள் இருதயம் துக்கத்தால் நிறைந்திருக்கிறது.
இறை வழி:
இழப்பின் வலியை உணராராயின்,
இரக்கம் எப்படி பிறக்கும்?
பிழைப்பிற்கென்று கொணர்வாராயின்,
பேசம் வாக்கும் பறக்கும்.
அழுது நடித்துச் செல்பவராயின்,
அவரைக் கீழே இறக்கும்.
ஏழைக்குதவி நல்குவாராயின்,
இவரால் அன்பு சிறக்கும்.
ஆமென்.
-கெர்சோம் செல்லையா.