இறை விருப்பு!
இறை மொழி: யோவான் 21: 20-23.
20. பேதுரு திரும்பிப்பார்த்து, இயேசுவுக்கு அன்பாயிருந்தவனும், இராப்போஜனம்பண்ணுகையில் அவர் மார்பிலே சாய்ந்து: ஆண்டவரே, உம்மைக் காட்டிக்கொடுக்கிறவன் யார் என்று கேட்டவனுமாகிய சீஷன் பின்னே வருகிறதைக் கண்டான்.
21. அவனைக் கண்டு, பேதுரு இயேசுவை நோக்கி: ஆண்டவரே, இவன் காரியம் என்ன என்றான்.
22. அதற்கு இயேசு: நான் வருமளவும் இவனிருக்க எனக்குச் சித்தமானால், உனக்கென்ன, நீ என்னைப் பின்பற்றிவா என்றார்.
23. ஆகையால் அந்தச் சீஷன் மரிப்பதில்லையென்கிற பேச்சு சகோதரருக்குள்ளே பரம்பிற்று. ஆனாலும், அவன் மரிப்பதில்லையென்று இயேசு சொல்லாமல், நான் வருமளவும் இவனிருக்க எனக்குச் சித்தமானால் உனக்கென்னவென்று சொன்னார்.
இறை வழி:
பேரிடி முழங்க இறைவாக்கீந்து
பேர் புகழ் பெருக்க விழைகையில்,
ஓரடி மட்டும் என் முன் சென்று,
ஒளி வீசும் என் கிறித்துவே,
ஆறடி மண்ணுள் அடங்கு முன்பு,
அடியன் கனி தரும் விளைச்சலில்,
சீரடி வைத்துச் சிறியருக்குதவ,
சிந்தை ஈவாய் கிறித்துவே!
ஆமென்.
![May be an image of 4 people](https://scontent.fmaa3-3.fna.fbcdn.net/v/t39.30808-6/416836617_7253180844712655_6811010506791441797_n.jpg?stp=dst-jpg_p180x540&_nc_cat=109&ccb=1-7&_nc_sid=3635dc&_nc_ohc=8NXOvNzfDjEAX_76BHs&_nc_ht=scontent.fmaa3-3.fna&oh=00_AfCn7_4gR9GZvfLuq0JNAwOO1IJz7t63F4-Ji-jTh9h6fw&oe=659E00F1)