இறையின் தீர்ப்பு!
நற்செய்தி: யோவான் 8:15-16.
நல்வழி:
ஆண்டிக்கும் தீர்ப்பு, அரசிற்கும் தீர்ப்பு,
ஆண்டவர் தீர்ப்பு ஒன்றேயாம்.
வேண்டிடும் நேர்மை, விரைவில் வருது.
விண்ணின் முடிவு நன்றேயாம்.
கூண்டில் அடைக்கும் முன்பே பார்த்து,
குற்றம் தவிர்ப்பது என்றேயாம்?
மாண்டபின் பேசிப் பயனேயில்லை.
மனிதா திருந்து, இன்றேயாம்!
ஆமென்.
-கெர்சோம் செல்லையா.