இறைமகன் சினத்தைப் பார்த்தீரா?

இறைமகன் சினத்தைப் பார்த்தீரா?
நற்செய்தி மாலை: மாற்கு 3:5.
“அவர் சினத்துடன் அவர்களைச் சுற்றிலும் திரும்பிப் பார்த்து, அவர்களது பிடிவாத உள்ளத்தைக் கண்டு வருந்தி, கை சூம்பியவரை நோக்கி, ‘ கையை நீட்டும் ‘ என்றார். அவர் நீட்டினார். அவருடைய கை மீண்டும் நலமடைந்தது.”
நற்செய்தி மலர்:
இறைமகன் சினந்ததை அறிவீரா?
ஏன் சினந்தார் எனத் தெரிவீரா?
முறைதனில் சினத்திற்கிடமில்லை;
முற்றிலும் தவறு என்பீரா?
நிறைந்தவர் நன்மை வழங்குகையில்,
நெறியிலார் தடுப்பதை ஏற்பீரா?
சிறையினில் பூட்டி வைப்பதல்ல;
சினத்துள் அன்பைப் பார்ப்பீரா?
ஆமென்.

 

 

Leave a Reply