இன்னொரு அடியார்!
இறை மொழி: யோவான் 18:15-16.
15. சீமோன்பேதுருவும் வேறொரு சீஷனும் இயேசுவுக்குப் பின்சென்றார்கள். அந்தச் சீஷன் பிரதான ஆசாரியனுக்கு அறிமுகமானவனாயிருந்ததினால், இயேசுவுடனேகூடப் பிரதான ஆசாரியனுடைய அரமனைக்குள் பிரவேசித்தான்.
16. பேதுரு வாசலருகே வெளியே நின்றான். அப்பொழுது பிரதான ஆசாரியனுக்கு அறிமுகமானவனாயிருந்த மற்றச் சீஷன் வெளியே வந்து, வாசல்காக்கிறவர்களுடனே பேசி, பேதுருவை உள்ளே அழைத்துக்கொண்டுபோனான்.
இறை வழி:
இன்னொரு அடியான் என்றே கூறி,
யோவான் யாரை மறைக்கிறார்?
தன்னை மறைத்துக் காட்டும் நற்பணி
தாழாதுயரச் சிறக்கிறார்.
என்னில் உண்டோ என்று பார்த்தும்,
இழிவெண்ணத்தைச் சிதைக்கிறார்.
முன்னால் நிற்பவர் ஏற்காரெனினும்,
முதற்கண் என்னில் விதைக்கிறார்!
ஆமென்.
![May be an illustration](https://scontent.fmaa3-3.fna.fbcdn.net/v/t39.30808-6/391746265_6938344366196306_8039629413181556912_n.jpg?stp=dst-jpg_p526x296&_nc_cat=109&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=3MOh-9Ur1jcAX-Q8Xzh&_nc_ht=scontent.fmaa3-3.fna&oh=00_AfB98PnzOqNeE2NtvIAlvzzgDjdCXQp2MlHLuoq0NJLV8g&oe=652D9659)