ஆயிரம் பன்றி மாட்டைவிட…

ஆயிரம் பன்றி மாட்டைவிட…

நற்செய்தி மாலை: மாற்கு 5:11-13.

“அங்கே மலைப்பகுதியில் பன்றிகள் பெருங் கூட்டமாய் மேய்ந்து கொண்டிருந்தன. “நாங்கள் அப்பன்றிகளுக்குள் புகும்படி எங்களை அங்கே அனுப்பிவிடும்” என்று தீய ஆவிகள் அவரை வேண்டின. அவரும் அவற்றுக்கு அனுமதி கொடுத்தார். பின் தீய ஆவிகள் வெளியேறிப் பன்றிகளுக்குள் புகுந்தன. ஏறக்குறைய இரண்டாயிரம் பன்றிகள் அடங்கிய அந்தக் கூட்டம் செங்குத்துப் பாறையிலிருந்து கடலில் பாய்ந்து வீழ்ந்து மூழ்கியது.”

நற்செய்தி மலர்:

நாயினைக் கொஞ்சும் நல்லவரே,

நடப்புச் செய்தியும் கேட்பவரே,

பாயிரம் என்று உதறாமல்,

படைத்தவர் விருப்பெது அறிவீரே!

ஆயிரம் பன்றி மாட்டை விட

அழியும் ஒருவன் உயர்வாமே.

வாயினை மூடி உறங்காமல்,

வாழ, மனிதனைக் காப்போமே!

ஆமென்.

நற்செய்தி மாலை's photo.

Leave a Reply