அவன் நானில்லை!
இறை மொழி: யோவான் 18:17-18.
17. அப்பொழுது வாசல்காக்கிற வேலைக்காரி பேதுருவை நோக்கி: நீயும் அந்த மனுஷனுடைய சீஷரில் ஒருவனல்லவா என்றாள். அவன்: நான் அல்ல என்றான்.
18. குளிர்காலமானபடியினாலே ஊழியக்காரரும் சேவகரும் கரிநெருப்புண்டாக்கி, நின்று, குளிர்காய்ந்துகொண்டிருந்தார்கள்; அவர்களுடனே கூடப் பேதுருவும் நின்று குளிர்காய்ந்துகொண்டிருந்தான்.
இறை வழி:
நீயும் இயேசுவின் அடியான்தானே?
நேர்மையோடு பதில் சொல்வாய்.
பேயும் கூட இதனைச் சொல்லும்;
பிறகு எதற்கு மறுத்தாய்?
தேயும் வாழ்வில் உண்மை வேண்டும்;
தெரிந்தும் நீ பொய் சொன்னாய்.
ஆயும் ஆவியர் அனலில் புகுந்து,
அடியோடுன்னை வெறுப்பாய்!
ஆமென்.
![May be an image of 4 people](https://scontent.fmaa3-2.fna.fbcdn.net/v/t39.30808-6/392861028_6942495779114498_7780208374214014063_n.jpg?stp=dst-jpg_p180x540&_nc_cat=111&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=OhVvYgPgGJwAX9Gti3a&_nc_ht=scontent.fmaa3-2.fna&oh=00_AfCkInBVG2HM8vsTQ1A2TAArrEP6j5auMsWX-E-XwsBOsQ&oe=652DFE16)