திருவாக்கு: மத்தேயு 27:54
“நூற்றுவர் தலைவரும் அவரோடு இயேசுவைக் காவல் காத்தவர்களும் நிலநடுக்கத்தையும் நிகழ்ந்தயாவற்றையும் கண்டு மிகவும் அஞ்சி, ‘ இவர் உண்மையாகவே இறைமகன் ‘ என்றார்கள்.”
அருட்சான்று:
அறைந்தவன் உரைத்தான் அருமைச் சான்று,
அன்பர் இயேசு இறைமகன் என்று.
குறைந்தவன் நானும் குரைப்பேன் இன்று,
கிறித்து எனக்கு எல்லாம் என்று!
நிறைந்த வாழ்வைக் காண விரும்பு;
நண்பா, நீயும் சிலுவை முன்பு.
உறைந்த பனியின் வெண்மை அன்பு,
உள்ளில் நிரம்ப உடன் திரும்பு!
ஆமென்.
