அடுத்த முந்நூற்றைம்பது ஆண்டில்,
அரசர் என்பவர் இல்லா நாளில்,
தடுத்து ஆளும் இறையைப் பிரிந்தார்.
தமக்குச் சரியென்பதும் புரிந்தார்.
கெடுப்பதும் கெடுவதுமாகத் திரிந்தார்;
கேட்டின் வேரும் பாராதிருந்தார்.
இடுக்கணில் மட்டும் இறைவா என்றார்.
இழிநிலைக்கே இப்படிச் சென்றார்!
(நீதித் தலைவர்கள் (21:25)
