சொன்னது கொஞ்சம்!
இறை மொழி: யோவான் 20:30-31.
30. இந்தப் புஸ்தகத்தில் எழுதியிராத வேறு அநேக அற்புதங்களையும் இயேசு தமது சீஷருக்கு முன்பாகச் செய்தார்.
31. இயேசு தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று நீங்கள் விசுவாசிக்கும்படியாகவும், விசுவாசித்து அவருடைய நாமத்தினாலே நித்தியஜீவனை அடையும்படியாகவும், இவைகள் எழுதப்பட்டிருக்கிறது.
இறை வழி:
சொல்லார் மிஞ்சும் நாட்டில்
சொன்னார் கொஞ்சம் ஏட்டில்.
நல்லார் நம்பியணைப்பார்.
நன்மைக்கிறை இணைப்பார்.
வல்லார் வகுத்தது அல்ல;
வாகைச் சூட்டிச் சொல்ல.
எல்லாம் மீட்பதே திட்டம்;
அன்புதான் இறைச்சட்டம்!
ஆமென்.
![May be an image of 1 person and text that says 'Characteristics of a Genuine Belief John 20:30-31 "...these have been written so that you may believe..."'](https://scontent.fmaa3-2.fna.fbcdn.net/v/t39.30808-6/414700064_7215629418467798_7961808519219862217_n.jpg?_nc_cat=111&ccb=1-7&_nc_sid=3635dc&_nc_ohc=onK57Vz0GyQAX-n-osO&_nc_ht=scontent.fmaa3-2.fna&oh=00_AfCNGW6kDJE9pm6LnD73qbkUCiFSeQvkJKvWD-hnhWwYeQ&oe=658E43B1)