நேர்மை வாழ்வு!
இறை மொழி: யோவான் 17:25.
25. நீதியுள்ள பிதாவே, உலகம் உம்மை அறியவில்லை, நான் உம்மை அறிந்திருக்கிறேன்; நீர் என்னை அனுப்பினதை இவர்களும் அறிந்திருக்கிறார்கள்.
நூற்றுக்கு நூறு, நேர்மை என்றால்,
நிமிர்ந்து நிற்க, எவருமில்லை.
போற்றுதற்குரிய, இறையின் அன்பால்,
போகிறோமெனில், தவறுமில்லை.
மாற்றியமைக்கும், மைந்தன் வாழ்வில்,
மாசினைத் தேடின், எதுவுமில்லை.
கூற்றினைப் போல, முயல்வார் மீள்வில்,
கிறித்துவன்றி, புதுமையில்லை!
ஆமென்.
-கெர்சோம் செல்லையா.
![May be an image of text](https://scontent.fmaa3-2.fna.fbcdn.net/v/t39.30808-6/370093054_6902471476450262_6412753742785672826_n.jpg?_nc_cat=100&ccb=1-7&_nc_sid=49d041&_nc_ohc=k6TpRc9VIZsAX8XCIGx&_nc_ht=scontent.fmaa3-2.fna&oh=00_AfAVd0BK9zCP1nWaPKgTNgnj5nP26EkgRVbWuBvwvsYAeg&oe=6520E2F7)