வாக்கு: யோவான் 10:11.
வாழ்வு:
ஐந்தறிவுள்ள ஆட்டைக் காக்க,
ஆறறிவாளன் உயிர் விட்டால்,
எந்த அறிஞர், இங்கு சொல்வார்,
அவனோர் ஆட்டின் நல்லாயன்?
மைந்தனிறையோ இவர் போலல்ல;
மனித வடிவாய்த் தனையிறக்கி,
சொந்த உயிரால் நம்மை மீட்டார்.
சொல்வோம், இவரே நல்லாயன்!
ஆமென்.
-கெர்சோம் செல்லையா.