நம்மில் இருப்பவர் யார்?

நம்மில் இருப்பவர் யார்?

இறைவாக்கு; யோவான் 14:10-11.

  1. நான் பிதாவிலும், பிதா என்னிலும் இருக்கிறதை நீ விசுவாசிக்கிறதில்லையா? நான் உங்களுடனே சொல்லுகிற வசனங்களை என் சுயமாய்ச் சொல்லவில்லை; என்னிடத்தில் வாசமாயிருக்கிற பிதாவானவரே இந்தக் கிரியைகளைச் செய்துவருகிறார்.
  2. நான் பிதாவிலும் பிதா என்னிலும் இருக்கிறதை நம்புங்கள்; அப்படியில்லாவிட்டாலும் என் கிரியைகளினிமித்தமாவது என்னை நம்புங்கள்.

இறை வாழ்வு:

என்னில் இருப்பவர் இறைவனெனில்,
எந்தன் செயலில் எவையிருக்கும்?
அன்பும் அறமும் தழைத்திருக்கும்;
அனைவர் மகிழ அவையிருக்கும்.
மண்ணின் அரசன் அலகையெனில்,
மாண்பு, மெய்மை எங்கிருக்கும்?
துன்பத் துயரே தொடர்ந்திருக்கும்;
துரித அழிவும் அங்கிருக்கும்!

ஆமென்.

-கெர்சோம் செல்லையா.