தவறே செய்யாதொருவர்!
நற்செய்தி: யோவான் 8:9.
9. அவர்கள் அதைக் கேட்டு, தங்கள் மனச்சாட்சியினால் கடிந்துகொள்ளப்பட்டு, பெரியோர்முதல் சிறியோர்வரைக்கும் ஒவ்வொருவராய்ப் போய்விட்டார்கள். இயேசு தனித்திருந்தார், அந்த ஸ்திரீ நடுவே நின்றாள்.
நல்வழி:
தவறே செய்யாதொருவர் வந்து,
தன் கையாலே கல்லெறிவீர்.
அவரே பிறரைத் தண்டிப்பதற்கு,
அருகதையுள்ளார்; சொல்லறிவீர்.
எவரே உரைப்பார் இவ்வருந்தீர்ப்பு?
இயேசுவின் திருமொழி என்றறிவீர்.
இவரே நடுவர், இனிமேல் நமக்கு;
இவர் வழி தூய்மை நன்கறிவீர்!
ஆமென்.
-கெர்சோம் செல்லையா.