தன்னலமுள்ளவன்!
வாக்கு: யோவான் 10:12-13.
வாழ்வு:
நான் மட்டும் நான் மட்டும், என்கிற எண்ணம்,
நஞ்செனப் பரவும் நம் நாட்டில்,
கோன் விட்டுக் கொடுத்த குருதியும் உயிரும்,
கொடியோர் கண்ணைத் திறவாதோ?
தேன் சொட்டும் தேன் சொட்டும் தெய்வ வாக்கும்,
தெரியா மனிதர் தம் வீட்டில்,
வான் எட்டும் நற்சீர் வாரிக் கொடுக்கும்,
வாழ்வு தரவும் பிறவாதோ?
ஆமென்.
-கெர்சோம் செல்லையா.