இறை மொழி: யோவான்:20:6-8.
சுருட்டி வைக்கப்பட்ட சீலைத் துணிகள்!
இறை மொழி: யோவான்:20:6-8.
6. சீமோன்பேதுரு அவனுக்குப் பின்னே வந்து, கல்லறைக்குள்ளே பிரவேசித்து,
7. சீலைகள் கிடக்கிறதையும், அவருடைய தலையில் சுற்றியிருந்த சீலை மற்றச் சீலைகளுடனே வைத்திராமல் தனியே ஒரு இடத்திலே சுருட்டி வைத்திருக்கிறதையும் கண்டான்.
8. முந்திக் கல்லறையினிடத்திற்கு வந்த மற்றச் சீஷனும் அப்பொழுது உள்ளே பிரவேசித்து, கண்டு விசுவாசித்தான்.
இறை வழி:
உருட்டப்பட்ட கல்லே சொல்லு;
உண்மை நிகழ்ச்சியே சொல்லு.
சுருட்டி வைத்த துணியே சொல்லு,
தூயோன் எழுச்சியே சொல்லு.
புரட்டு மனிதர் விரைந்து முடித்து,
பிடிபடாதிருக்கப் பறப்பாரா?
திருட்டு பழியா? வரட்டும் என்று,
துணியை மடித்து நிற்பாரா?
ஆமென்.