என்னைத் தொடாதே!
இறை மொழி: யோவான் 20:17.
17. இயேசு அவளை நோக்கி: என்னைத் தொடாதே, நான் இன்னும் என் பிதாவினிடத்திற்கு ஏறிப்போகவில்லை; நீ என் சகோதரரிடத்திற்குப் போய், நான் என் பிதாவினிடத்திற்கும் உங்கள் பிதாவினிடத்திற்கும், என் தேவனிடத்திற்கும் உங்கள் தேவனிடத்திற்கும் ஏறிப்போகிறேன் என்று அவர்களுக்குச் சொல்லு என்றார்.
இறை வழி:
தன்னைத் தழுவும், உரிமை எடுக்கும்
தன்னலம் கண்ட இறைமகனார்,
என்னைத் தொடாது எட்டியே நில்லு,
என்கிற வாக்கின் பொருளறிவோம்.
இன்னிலம் காணும் இனிமை கொடுக்கும்;
ஈடிலா அன்பின் இறைமகனார்,
நன்மையெடுத்துப் பகிர்வதும் சொல்லு;
நல்ல சமத்துவ அருளறிவோம்!
ஆமென்.
![May be an image of 2 people](https://scontent.fmaa3-2.fna.fbcdn.net/v/t39.30808-6/411414676_7178918005472273_3513662510128935257_n.jpg?_nc_cat=105&ccb=1-7&_nc_sid=3635dc&_nc_ohc=etQX9-p0GWoAX9jT9xw&_nc_ht=scontent.fmaa3-2.fna&oh=00_AfCkIh2PFe0zirOK30a_EjjPass0C8i79TBpkUu9SPu7AA&oe=6581DD42)