ஆட்சியுரிமை!
இறை மொழி: யோவான் 19:10-11.
10. அப்பொழுது பிலாத்து: நீ என்னோடே பேசுகிறதில்லையா? உன்னைச் சிலுவையில் அறைய எனக்கு அதிகாரமுண்டென்றும், உன்னை விடுதலைபண்ண எனக்கு அதிகாரமுண்டென்றும் உனக்குத் தெரியாதா என்றான்.
11. இயேசு பிரதியுத்தரமாக: பரத்திலிருந்து உமக்குக் கொடுக்கப்படாதிருந்தால், என்மேல் உமக்கு ஒரு அதிகாரமுமிராது; ஆனபடியினாலே என்னை உம்மிடத்தில் ஒப்புக்கொடுத்தவனுக்கு அதிக பாவமுண்டு என்றார்.
இறை வழி:
ஆளும் உரிமை ஆண்டவர் தருவது.
அறிந்து ஆள்பவர், யார் இங்கே?
வாழும் உரிமை அனைவர்க்குரியது.
வழி மறுப்பதால், போர் இங்கே.
தாழும் நிலைக்குத் தள்ளிக் கெட்டது
தன்னலமாகும், கேள் இங்கே.
நீளும் துன்பம் முடிக்கப்பட்டது,
நேர்மையிலாகும்; வாழ் இங்கே!
ஆமென்.
![No photo description available.](https://scontent.fmaa3-3.fna.fbcdn.net/v/t39.30808-6/399120219_7020512551312820_3516751169201116760_n.jpg?stp=dst-jpg_p180x540&_nc_cat=108&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=wRazpfbP2R4AX_rI8ZL&_nc_oc=AQnKjrpc7WfE3Qdd9wnPmE2-QB9NJ58bozYz8zZZDiQz4HJK3QWuBieYwYu8e95lrwQ&_nc_ht=scontent.fmaa3-3.fna&oh=00_AfAhgoBDrPqWHThLrelLa1gtXjkrm6QkWFlmxhNPPmFbvQ&oe=6549F7D9)