அழகும், பேரழகும்! அழகும், பேரழகும்! ஓடுதல் ஆற்றிற்கு அழகு. ஒடுங்குதல் ஊற்றிற்கழகு. பாடுதல் பறவைக்கு அழகு. பாய்தலே விலங்கிற்கழகு. கூடுதல் மனிதர்க்கு அழகு; கொடுப்பதே நமக்கழகு. தேடுதல் அறிவியல் அழகு. தெரியும் இறை, பேரழகு! -கெர்சோம் செல்லையா.