அமைதி!
இறை மொழி: யோவான் 20:19-20.
19. வாரத்தின் முதல்நாளாகிய அன்றையத்தினம் சாயங்காலவேளையிலே, சீஷர்கள் கூடியிருந்த இடத்தில், யூதர்களுக்குப் பயந்ததினால் கதவுகள் பூட்டியிருக்கையில், இயேசு வந்து நடுவே நின்று: உங்களுக்குச் சமாதானம் என்றார்.
20. அவர் இப்படிச் சொல்லித் தம்முடைய கைகளையும் விலாவையும் அவர்களுக்குக் காண்பித்தார். சீஷர்கள் கர்த்தரைக்கண்டு சந்தோஷப்பட்டார்கள்.
இறை வழி:
அடையாத பொருட்கள் இங்கிருப்பின்,
அவற்றில் ஒன்று அமைதியாம்.
உடையாத நெஞ்சம் எங்குமில்லை;
ஊர் தராது நிம்மதியாம்.
கிடையாத மனிதர் தேடித்திரிகையில்,
கிறித்து வந்து தருவராம்.
மடையாக ஊற்றும் காயம் பாரும்;
மா அமைதி பெறுவராம்!
ஆமென்.
![May be a doodle of text](https://scontent.fmaa3-3.fna.fbcdn.net/v/t39.30808-6/412269557_7189665164397557_1259410906586125255_n.jpg?_nc_cat=103&ccb=1-7&_nc_sid=3635dc&_nc_ohc=8QKlHICRG2QAX-4BTLk&_nc_ht=scontent.fmaa3-3.fna&oh=00_AfBMMPVHB31noA67zaiQ7He9vo12r6g7FgW0pTgtkt7-Dw&oe=658614BA)