மற்றவர் உறங்கச் செல்லும் நேரம்,
மன்றாடுகிற இயேசுவைப் பார்.
உற்றவர் மூவர் உடன் சென்றாலும்,
உறங்கி விழுகிற காட்சியும் பார்.
கற்றவர் என்கிற கண்ணுடை நாமும்,
கனவில் நாளைக் கழிப்பது பார்.
கொற்றவர் இயேசு சொற்படி வேண்டு;
குறை இல்லாத மாட்சியும் பார்!
(மாற்கு 14:32-40).