எத்தனை திரள் என் தீவினை அறிவேன்;
எப்படி நான் இறை மீட்பு பெறுவேன்?
அத்தனை வழிகளும் முட்டிடும் சந்து;
அழுது, திரும்புது, என் மகிழ்வுந்து!
ஒத்தையொரு வழி பவுல் அறிவித்தார்;
இயேசு மீதுறும் பற்றென்றுரைத்தார்.
பித்தம் தெளிய நான் பற்றிக் கொண்டேன்.
பேரருளாலே, மீட்பும் கண்டேன்!
(உரோமர் 3)