பெருகட்டும், பெருகட்டும்!

பெருகட்டும், பெருகட்டும்!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 8:17-18.
17 வெளியரங்கமாகாத இரகசியமுமில்லை, அறியப்பட்டு வெளிக்குவராத மறைபொருளுமில்லை.
18

ஆதலால் நீங்கள் கேட்கிற விதத்தைக்குறித்துக் கவனியுங்கள்; உள்ளவனெவனோ அவனுக்குக் கொடுக்கப்படும்; இல்லாதவனெவனோ அவன் தனக்குண்டென்று நினைக்கிறதும் அவனிடத்திலிருந்து எடுத்துக்கொள்ளப்படும் என்றார்.

கிறித்துவில் வாழ்வு:
ஆண்டவர் அளிக்கும் அருளும் பெருகும்;
அதனை அறிபவர் பற்றும் பெருகும்.
மீண்டவர் வாழ்வில் நன்மை பெருகும்.
மேன்மை வழியாம் அன்பும் பெருகும்.
வேண்டுதல் செய்ய வலுவும் பெருகும்;
விடுதலை ஆவியர் வரமும் பெருகும்.
கூண்டிலிருப்பின் எப்படிப் பெருகும்?
கிறித்துவாலே எல்லாம் பெருகும்!
ஆமென்.

No photo description available.

Leave a Reply