வெட்கப்படாதீர்!

வெட்கப்படாதீர்!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 9.26-27.

26என்னைக்குறித்தும் என் வார்த்தைகளைக்குறித்தும் எவன் வெட்கப்படுகிறானோ, அவனைக்குறித்து மனுஷகுமாரனும் தம்முடைய மகிமையோடும் பிதாவின் மகிமையோடும் பரிசுத்த தூதர்களின் மகிமையோடும் வரும்போது வெட்கப்படுவார்.
27இங்கே நிற்கிறவர்களில் சிலர் தேவனுடைய ராஜ்யத்தைக் காணுமுன், மரணத்தை ருசிபார்ப்பதில்லையென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.

கிறித்துவில் வாழ்வு:
பற்றைப் பெற்றவர் மறைப்பதினால்,
பலபேர் நன்மை இழக்கின்றார்.
பெற்றக் கிறித்தவர் கொடுப்பதினால்,
பெரிதாய் வளர்ந்து தழைக்கின்றார்.
சற்றும் வெட்கம் கொள்ளாமல்,
சான்றாய் வாழ வருபவர் யார்?
முற்றுப் பெறாத இறையரசில்,
முடியா வாழ்வு பெறுபவரார்!
ஆமென். 


Leave a Reply