வீட்டிலும் போதிப்பீர்!

வீட்டாருக்கும் சொல்வோம்!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 17:30-32.

30  மனுஷகுமாரன் வெளிப்படும் நாளிலும் அப்படியே நடக்கும்.

31  அந்த நாளிலே வீட்டின்மேலிருப்பவன் வீட்டிலுள்ள தன் பண்டங்களை எடுத்துக்கொண்டுபோக இறங்காமல் இருக்கக்கடவன்; அப்படியே வயலிலிருக்கிறவன் பின்னிட்டுத் திரும்பாமலும் இருக்கக்கடவன்.

32  லோத்தின் மனைவியை நினைத்துக் கொள்ளுங்கள்.

கிறித்துவில் வாழ்வு:

கொடுப்பவர் வெறுத்து, கொடுப்பதை விரும்பும்,

கொடிய உலகமடா. கோணல் பாதையடா.

எடுப்பவர் அறியார், எடுப்பதும் தெரியார்,

 இல்லை நேர்மையடா, இவரும் பேதையடா.

அடுப்பவர் நினைத்து, அவரை அணைத்து,

அவருக்குதவிடுடா, அதுதான் நீதியடா.

விடுப்பவர் வீழ்வார், வெந்தும் போவார்;

விடுதலை இல்லையடா, வீட்டில் போதியடா!

ஆமென்.

Leave a Reply