வீட்டாருக்கும் சொல்வோம்!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 17:30-32.
30 மனுஷகுமாரன் வெளிப்படும் நாளிலும் அப்படியே நடக்கும்.
31 அந்த நாளிலே வீட்டின்மேலிருப்பவன் வீட்டிலுள்ள தன் பண்டங்களை எடுத்துக்கொண்டுபோக இறங்காமல் இருக்கக்கடவன்; அப்படியே வயலிலிருக்கிறவன் பின்னிட்டுத் திரும்பாமலும் இருக்கக்கடவன்.
32 லோத்தின் மனைவியை நினைத்துக் கொள்ளுங்கள்.
கிறித்துவில் வாழ்வு:
கொடுப்பவர் வெறுத்து, கொடுப்பதை விரும்பும்,
கொடிய உலகமடா. கோணல் பாதையடா.
எடுப்பவர் அறியார், எடுப்பதும் தெரியார்,
இல்லை நேர்மையடா, இவரும் பேதையடா.
அடுப்பவர் நினைத்து, அவரை அணைத்து,
அவருக்குதவிடுடா, அதுதான் நீதியடா.
விடுப்பவர் வீழ்வார், வெந்தும் போவார்;
விடுதலை இல்லையடா, வீட்டில் போதியடா!
ஆமென்.