விளக்கு!

விளக்கு!
நற்செய்தி: யோவான் 5:33-35.

நல்வழி:


ஒழுக்கமும் உண்மையும் உயரிய அருளாம்.

உணரார் வாழ்வு முழுவதும் இருளாம்.

இழுக்குண்டாக்குதல் இருளின் பணியாம்.

இதனை மறக்கும் நெஞ்சும் பிணியாம்.

அழுக்கினை அகற்றுதல் இறையின் விருப்பாம்.

அதன் அடையாளம் ஒளி தரும் நெருப்பாம்.

விழுப்பம் வேண்டும் எவர்க்கும் மருந்தாம்;

விளக்காய் வந்த யோவான் விருந்தாம்!


ஆமென்.


-கெர்சோம் செல்லையா.

Leave a Reply