வளர்ச்சி?

ஒரு சிலர் வளர்வதுதான் வளர்ச்சியா?

ஓரிரு முதலைகள் வாழும் குளத்தில்,
உயிர்தப்ப மீன்கள் என்செய்யும்?
ஈரிரு முதலாளிகள் செழிப்பதில்,
இந்தியா எப்படி முன்னேறும்?
பாரிதை வளர்ச்சி என்றுரைத்தாலும்,
பாவியால் ஏற்க முடியலையே.
யாரிதை நிறுத்தி, எளியரைக் காப்பார்?
இறையரசன்றி விடிவிலையே!
-கெர்சோம் செல்லையா.

Leave a Reply