வற்றா ஆறு மன்னிப்பு!

வற்றா ஆறு மன்னிப்பு!
நற்செய்தி மாலை: மாற்கு 15:29-32.
“அவ்வழியே சென்றவர்கள் தங்கள் தலைகளை அசைத்து, ‘ ஆகா, திருக்கோவிலை இடித்து மூன்று நாளில் கட்டி எழுப்புகிறவனே, சிலுவையிலிருந்து இறங்கி உன்னையே விடுவித்துக்கொள் ‘ என்று அவரைப் பழித்துரைத்தார்கள். அவ்வாறே தலைமைக் குருக்கள் மறைநூல் அறிஞர்களுடன் சேர்ந்து அவரை ஏளனம் செய்து, ‘ பிறரை விடுவித்தான், தன்னையே விடுவிக்க முடியவில்லை ‘ என்று தங்களிடையே பேசிக்கொண்டார்கள். அவர்கள், ‘ இஸ்ரயேலின் அரசனாகிய மெசியா இப்போது சிலுவையிலிருந்து இறங்கி வரட்டும்; அப்போது நாங்கள் கண்டு நம்புவோம் ‘ என்றார்கள். அவரோடு சிலுவையில் அறையப்பட்டிருந்தவர்களும் அவரை இகழ்ந்தார்கள்.”
நற்செய்தி மலர்:
கற்றோர் மற்றோர் யாவருடன்,
கள்வரும் இயேசுவை நிந்தித்தார்;
அற்றோர் மீட்பு அடைவதற்கே,
அன்பாய் அவற்றைச் சந்தித்தார்.
பெற்றோர் நம்மைப் பொறுப்பதுபோல்,
பேரன்பர் யாவும் மன்னித்தார்;
வற்றா ஊற்றாம் மன்னிப்பை,
வழங்கவே நமையும் முன்வைத்தார்!
ஆமென்.

Image may contain: text

Leave a Reply