வஞ்சக நெஞ்சு!

வஞ்சக நெஞ்சு! 
கிறித்துவின் வாக்கு: லூக்கா 20:5-8. 

5   அவர்கள் தங்களுக்குள்ளே யோசனைபண்ணி: தேவனால் உண்டாயிற்று என்று சொல்வோமானால், பின்னை ஏன் அவனை விசுவாசிக்கவில்லை என்று கேட்பார்.

6   மனுஷரால் உண்டாயிற்று என்று சொல்வோமானால், ஜனங்களெல்லாரும் யோவானைத் தீர்க்கதரிசியென்று எண்ணுகிறபடியினால் நம்மேல் கல்லெறிவார்கள் என்று சொல்லி:

7   அது யாரால் உண்டாயிற்றோ, எங்களுக்குத் தெரியாது என்று பிரதியுத்தரம் சொன்னார்கள்.

8   அப்பொழுது இயேசு: நானும் இன்ன அதிகாரத்தினால் இவைகளைச் செய்கிறேனென்று உங்களுக்குச் சொல்லேன் என்றார். 

கிறித்துவில் வாழ்வு: 

பிஞ்சு குழந்தை போன்று நடித்து,

பெரிய விடைகள் தேடுகிறார். 

நஞ்சு கலந்த நெஞ்சு மறைத்து,

நயந்த வாக்கால்  மூடுகிறார். 

பஞ்சு போன்று அவர் பறந்து,

பதில் பெறாது ஒடுகிறார். 

கெஞ்சு நிலையில் விழுகிறபோது,

கீழோர் கிறித்துவை நாடுகிறார்! 

ஆமென்.

Leave a Reply