மழலையர் !

மழலையரைப் பார்த்து!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 18:15-17.15  பின்பு குழந்தைகளையும் அவர் தொடும்படிக்கு அவர்களை அவரிடத்தில் கொண்டுவந்தார்கள். சீஷர்கள் அதைக் கண்டு, கொண்டுவந்தவர்களை அதட்டினார்கள்.16  இயேசுவோ அவர்களைக் கொண்டுவரும்படி கட்டளையிட்டு: சிறு பிள்ளைகள் என்னிடத்தில் வருகிறதற்கு இடங்கொடுங்கள், அவர்களைத் தடைபண்ணாதிருங்கள்; தேவனுடைய ராஜ்யம் அப்படிப்பட்டவர்களுடையது.17  எவனாகிலும் சிறு பிள்ளையைப்போல் தேவனுடைய ராஜ்யத்தை ஏற்றுக்கொள்ளாவிட்டால், அதில் பிரவேசிக்கமாட்டான் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
கிறித்துவில் வாழ்வு:
தந்தை தாயைப் பார்த்துப் பயின்றும்,

தவறுகள் என்னில் இருப்பதனால்,

மைந்தனேசு மாற்றிச் சொன்னார்;

மழலையர் பண்பைப் பார் என்று.

இந்த அறிவும் இவர்கள் அன்பும்,

இன்று என்னில் இராததனால்,

சொந்த வாழ்வில் குறைவுபட்டேன்;

சொற்படித் திருத்துவீர் இன்று!

ஆமென். 

Leave a Reply