மறுமுறையா?

காலந்தராது மறுமுறையாம்!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 9:59-60.
59வேறொருவனை அவர் நோக்கி: என்னைப் பின்பற்றிவா என்றார். அதற்கு அவன்: ஆண்டவரே, முன்பு நான் போய் என் தகப்பனை அடக்கம்பண்ண எனக்கு உத்தரவு கொடுக்கவேண்டும் என்றான்.
6
அதற்கு இயேசு: மரித்தோர் தங்கள் மரித்தோரை அடக்கம்பண்ணட்டும்; நீ போய், தேவனுடைய ராஜ்யத்தைக்குறித்துப் பிரசங்கி என்றார்.

கிறித்துவில் வாழ்வு:
அழைக்கும்போது அடிபணிவதுதான், 
ஆண்டவர் காட்டும் இறைப்பணியாம்.
உழைக்கும் வலுவும் உதவும் பொருளும்,
உவந்து அருளக் குறைவிலையாம்.
பிழைப்பிற்கென்று போக்குச் சொல்லி,
போகாதிருத்தல் பொறுப்பிலையாம்.
கழைக்கூத்தாடி கடவுளை மறப்பின்,
காலந்தராது மறுமுறையாம்!
ஆமென்.

Leave a Reply