மருத்துவச் செய்தி!

மருத்துவர் லூக்காவின் மருத்துவச் செய்தி!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 8:43-44.
43 அப்பொழுது பன்னிரண்டு வருஷமாய்ப் பெரும்பாடுள்ளவளாயிருந்து, தன் ஆஸ்திகளையெல்லாம் வைத்தியர்களுக்குச் செலவழித்தும், ஒருவனாலும் சொஸ்தமாக்கப்படாதிருந்த ஒரு ஸ்திரீ,
44 அவருக்குப் பின்னாக வந்து, அவருடைய வஸ்திரத்தின் ஓரத்தைத் தொட்டாள்; உடனே அவளுடைய பெரும்பாடு நின்றுபோயிற்று.

கிறித்துவில் வாழ்வு:
வாடிய முகம் பார்த்து
வருந்துவார் பலருண்டு.
நாடித் துடிப்பறிந்து,
நலமுரைப்பார் சிலருண்டு.
தேடிய பொருள் இழந்தும்,
தெரியாக் குறையுண்டு.
ஓடிக் களைத்தவரே,
உமை மீட்க இறையுண்டு!
ஆமென்.

Image may contain: text, outdoor and water

Leave a Reply