பொறுமையின் சின்னம்!

பொறுமையின் சின்னம்!
நற்செய்தி மாலை: மாற்கு 11-1-3.
“இயேசு தம் சீடரோடு ஒலிவமலை அருகிலுள்ள பெத்பகு, பெத்தானியா என்னும் ஊர்களுக்கு வந்து, எருசலேமை நெருங்கியபொழுது இரு சீடர்களை அனுப்பி, ″ உங்களுக்கு எதிரே இருக்கும் ஊருக்குள் போங்கள்; அதில் நுழைந்தவுடன், இதுவரை யாரும் அமராத ஒரு கழுதைக்குட்டி கட்டி வைக்கப்பட்டிருப்பதைக் காண்பீர்கள். அதை அவிழ்த்துக் கொண்டு வாருங்கள். யாராவது உங்களிடம், ‘ ஏன் இப்படிச் செய்கிறீர்கள்? ‘ என்று கேட்டால், ‘ இது ஆண்டவருக்குத் தேவை, இதை அவர் உடனே திருப்பி இங்கு அனுப்பிவிடுவார் ‘ எனச் சொல்லுங்கள் ″ என்றார்.”

நற்செய்தி மலர்:
பொறுமையின் சின்னம் கழுதையாகும்.
போர் வெறி கொள்வதோ குதிரையாகும்.
வெறுமையில் உழலும் எளியோர்க்குதவும்.
வேண்டாம் நம்மில் வெறித்தனம் எதுவும்.
அருமையாய் இதை எடுத்துக் கூறும்,
ஆண்டவர் செயல்கள் மாதிரியாகும்.
பெருமைகள் விட்டு உழைப்பவர் எவரும்,
பேரரசருக்கோ, பாதிரியாகும்!
ஆமென்.

Image may contain: outdoor and nature

Leave a Reply