பொருளியல் கற்போம்!

பொருளியல் கற்போம்! 
கிறித்துவின் வாக்கு: லூக்கா 21:1-4.  

1   அவர் கண்ணேறிட்டுப் பார்த்தபோது, ஐசுவரியவான்கள் காணிக்கைப் பெட்டியிலே தங்கள் காணிக்கைகளைப் போடுகிறதைக் கண்டார்.

2   ஒரு ஏழை விதவை அதிலே இரண்டு காசைப் போடுகிறதையும் கண்டு:

3   இந்த ஏழை விதவை மற்றெல்லாரைப் பார்க்கிலும் அதிகமாகப் போட்டாள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.

4   அவர்களெல்லாரும் தங்கள் பரிபூரணத்திலிருந்தெடுத்துத் தேவனுக்கென்று காணிக்கை போட்டார்கள்; இவளோ தன் வறுமையிலிருந்து தன் ஜீவனத்துக்கு உண்டாயிருந்ததெல்லாம் போட்டுவிட்டாள் என்றார். 

கிறித்துவில் வாழ்வு:  

இரண்டு காசுச் சொத்தையெடுத்து, 

ஏழை படைத்தது நிறைவாகும்.  

திரண்டு வழியும் கோடியிலிருந்து, 

தெரியும் இலட்சமும் குறைவாகும். 

உருண்டு ஓடும் காசைச் சேர்த்து,  

உதவாதிருப்பது சிறையாகும்.  

புரண்டு விழுமுன், பொருளியல் அறிவு,  

புகட்டித் தருவது இறையாகும்!  

ஆமென்.

Leave a Reply