பொய்யுரைப்பார் முன்னிலையில்….

Image may contain: 1 person
பொய்யுரைப்பார் முன்னிலையில்….
நற்செய்தி மாலை: மாற்கு 14:60-62.
“அப்பொழுது தலைமைக் குரு எழுந்து அவர்களின் நடுவே நின்று, ‘ இவர்கள் உனக்கு எதிராகக் கூறும் சான்றுக்கு மறுமொழி ஒன்றும் கூற மாட்டாயா? ‘ என்று இயேசுவைக் கேட்டார். ஆனால் அவர் பேசாதிருந்தார். மறுமொழி ஒன்றும் அவர் கூறவில்லை. மீண்டும் தலைமைக் குரு, ‘ போற்றுதற்குரிய கடவுளின் மகனாகிய மெசியா நீதானோ? ‘ என்று அவரைக் கேட்டார். அதற்கு இயேசு, ‘ நானே அவர்; மேலும் மானிடமகன் வல்லவராம் கடவுளின் வலப்புறத்தில் வீற்றிருப்பதையும் வானமேகங்கள் சூழ வருவதையும் காண்பீர்கள் ‘ என்றார்.”
 
நற்செய்தி மலர்:
பொய்யுரைப்பார் முன்னிலையில்
பொறுமையுடன் நின்றார்.
மெய்யுரைக்கப் பண்ணுகையில்,
மெய்யே தான் என்றார்.
அய்யனேசு வழியில்தான்
அடியவரும் சென்றார்.
தொய்வின்றித் துணிந்துரைத்தால்,
தோற்பதில்லை என்பார்!
ஆமென்.

Leave a Reply