பிணி, மூப்பு, சாவு!

பிணி, மூப்பு, சாவு!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 8:40-42.
40 இயேசு திரும்பி வந்தபோது ஜனங்களெல்லாரும் அவருக்காகக் காத்திருந்தபடியால் அவரைச் சந்தோஷமாய் ஏற்றுக்கொண்டார்கள்.
41 அப்பொழுது ஜெபஆலயத்தலைவனாகிய யவீரு என்னும் பேருள்ள ஒருவன் வந்து, இயேசுவின் பாதத்தில் விழுந்து, பன்னிரண்டு வயதுள்ள தன்னுடைய ஒரே குமாரத்தி மரண அவஸ்தையாயிருந்தபடியால்,
42 தன் வீட்டிற்கு வரும்படி அவரை வேண்டிக்கொண்டான். அவர் போகையில் திரளான ஜனங்கள் அவரை நெருக்கினார்கள்.

கிறித்துவில் வாழ்வு:
பிணி, மூப்பு, சாவு, இம்மூன்றைப்
பிறவியில் வென்றவர் எவருமில்லை.
துணி சுற்றும் உடல் விழுந்தாலும்,
தொடர்வது நன்மை அருளெல்லை!
அணி கலனாய் அவைகளை அடைய,
அறிய வேண்டும் திருச்சொல்லை.
பணி சுமக்க, அன்பும் தருவார்;
பறந்து போகும் பெருந்தொல்லை!
ஆமென்.

Image may contain: text that says "PRAYER FOR THE SICK Father God, we pray for all those who are facing sickness in their bodies. We ask that you would restore their health, soothe their pain, and ease their worry. Give them your peace and comfort as they wait. In Jesus' name, Amen!"

Leave a Reply