பற்றில் குறைவுள்ளேன்!

பற்றில் குறைவுள்ளேன்!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 8:49-50.
 
49 அவர் இப்படிப் பேசிக்கொண்டிருக்கையில், ஜெப ஆலயத்தலைவனுடைய வீட்டிலிருந்து ஒருவன் வந்து, அவனை நோக்கி: உம்முடைய குமாரத்தி மரித்துப் போனாள், போதகரை வருத்தப்படுத்த வேண்டாம் என்றான்.
50 இயேசு அதைக் கேட்டு: பயப்படாதே; விசுவாசமுள்ளவனாயிரு, அப்பொழுது அவள் இரட்சிக்கப்படுவாள் என்றார்.
 
கிறித்துவில் வாழ்வு:
மாண்டவரை எழுப்புகின்ற,
மாவலிமை நிறையிறையே,
ஆண்டழிக்கும் அலகையினால்,
ஐயங்களில் விழுகின்றேன்.
வேண்டுகின்ற பற்றளவு,
வீணனிடம் இல்லைதான்.
மீண்டுமிதை அறிக்கையிட்டு,
மேலோனே, எழுகின்றேன்!
ஆமென்.

Leave a Reply