பயனில்லாரைத் தெரிவது தொல்லை!


​பயனில்லாரைத் தெரிவது தொல்லை!
ஏழ்மை ஒழிப்பே நோக்கு என்பார்;

ஏழையை ஒழிக்கவே நோக்குகின்றார்!
ஊழல் இல்லா ஆட்சி என்பார்;
ஊதிப் பெருக்கவே ஆளுகின்றார்!
வாழ வைக்கும் தலைவரும் இல்லை;
வறுமையை ஒழிக்கும் தலையும் இல்லை!
பாழாய்ப் போனது தேர்தல் இல்லை;
பயனில்லாரைத் தெரிவதே தொல்லை!
-கெர்சோம் செல்லையா.

Leave a Reply