பத்து!

பத்தை வைத்து பத்து!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 19:16-17.

16  அப்பொழுது முந்தினவன் வந்து: ஆண்டவனே, உம்முடைய ராத்தலினால் பத்துராத்தல் ஆதாயம் கிடைத்தது என்றான்.

17  எஜமான் அவனை நோக்கி: நல்லது உத்தம ஊழியக்காரனே, நீ கொஞ்சத்தில் உண்மையுள்ளவனாயிருந்தபடியால் பத்துப் பட்டணங்களுக்கு அதிகாரியாயிரு என்றான்.

கிறித்துவில் வாழ்வு:

பத்தினைத் தந்ததும் உம் அருளே;

பயன்கள் வந்ததும் உம் அருளே.

அத்தனைச் சொத்தும் உம் அருளே;

அடியனால் அல்ல, உம் அருளே.

பித்தனாய்ப் பதுக்கேன் உம் பொருளே;

பிறர்க்கும் தேவை உம் பொருளே.

மொத்தமும் படைத்தேன் உம் பொருளே;

மும்மைத் தெய்வமாம் பரம்பொருளே!

ஆமென்.

Leave a Reply