பசியாற்றுபவர் எங்குள்ளார்?

பசியாற்றுபவர் எங்குள்ளார்?
கிறித்துவின் வாக்கு: லூக்கா: 4:1-2
1 இயேசு பரிசுத்த ஆவியினாலே நிறைந்தவராய் யோர்தானை விட்டுத் திரும்பி, ஆவியானவராலே வனாந்தரத்திற்குக் கொண்டுபோகப்பட்டு,
2 நாற்பதுநாள் பிசாசினால் சோதிக்கப்பட்டார். அந்த நாட்களில் அவர் ஒன்றும் புசியாதிருந்தார்; அந்த நாட்கள் முடிந்தபின்பு அவருக்குப் பசியுண்டாயிற்று.

கிறித்துவில் வாழ்வு:
பசியில் வதங்கும் ஏழைக்கு,
பார்க்கும் ஆட்சியர் என்செய்தார்?
கசியும் நீரைப் பெறுவதற்குக்
கால் கடுக்க வைத்துள்ளார்.
ருசியாய் உணவு உண்பவர்க்கு,
பசியின் கொடுமை உரைப்பவர் யார்?
புசியும் நண்பா, என்றழைத்துப்
பசியாற்றுபவர் எங்குள்ளார்?
ஆமென்.

No automatic alt text available.

Leave a Reply