நிமிர்வோம்!

விண்ணில் இயேசு வெளிப்படும்போது!  

கிறித்துவின் வாக்கு: லூக்கா 21:27-28.  

27  அப்பொழுது மனுஷகுமாரன் மிகுந்த வல்லமையோடும் மகிமையோடும் மேகத்தின்மேல் வருகிறதைக் காண்பார்கள்.

28  இவைகள் சம்பவிக்கத் தொடங்கும்போது, உங்கள் மீட்பு சமீபமாயிருப்பதால், நீங்கள் நிமிர்ந்து பார்த்து, உங்கள் தலைகளை உயர்த்துங்கள் என்றார்.  

கிறித்துவில் வாழ்வு:

விண்ணில் இயேசு வெளிப்படும்போது,  

விரும்பும் அடியார் நிமிர்வாரே.  

மண்ணில் பட்ட பாடுகள் விட்டு,   

மன்னன் மடிமேல் அமர்வாரே.  

கண்ணில் அந்நாள் காண்போமென்று,  

கடவுளை இன்றே பணிவீரே.  

உண்ணும், உறங்கும், உழைக்கும்போது,  

உயர்த்தும் மீட்பை அணிவீரே!  

ஆமென்.

Leave a Reply