நானோ? நானோ?

நானோ? நானோ?
நற்செய்தி மாலை: மாற்கு 14:17-19.
“மாலை வேளையானதும் இயேசு பன்னிருவரோடு வந்தார். அவர்கள் பந்தியில் அமர்ந்து உண்டு கொண்டிருந்தபொழுது இயேசு, ‘ என்னோடு உண்ணும் உங்களுள் ஒருவன் என்னைக் காட்டிக்கொடுப்பான் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன் ‘ என்றார். அவர்கள் வருத்தமுற்று, ஒருவர் பின் ஒருவராக, ‘ நானோ? நானோ? ‘ என்று அவரிடம் கேட்கத் தொடங்கினார்கள்.”
நற்செய்தி மலர்:
நானோ கயவன் என்று கேட்கும்
நல்லோர் நடுவில் ஒருவன் பார்.
ஏனோ அவனை இயேசு கண்டும்,
எதற்கு வைத்தார், அறிவோன் யார்?
வானோர்க்கடுத்த புதிராய் வாழ்வில்,
வஞ்சகர் நம்மைச் சூழ்கின்றார்.
தேனோ, நஞ்சோ, தெரியாவிடினும்,
தெய்வம் நம்மை ஆள்கின்றார்!
ஆமென்.

No automatic alt text available.

Leave a Reply