நல்லடக்கம்!

நல்லடக்கம்!
கிறித்துவின் வாக்கு:  லூக்கா  23:52-53.

கிறித்துவில் வாழ்வு:  
நல்லறை வீடு இல்லாரும்,  
நாட்டின் எதிரி என்பாரும்,  
கொல்லப்படுகிற வேளைகளில்,  
கொளுத்தப்படுவதைக் காண்போரே,
செல்லப் பிள்ளை இயேசுவிற்குச்  
சேர ஓரிடம் இலாதிருந்தும்,  
கல்லறை ஓன்று கன்மலையில், 
கட்டியிருந்ததைக் காண்பீரே. 
ஆமென்.  
-கெர்சோம் செல்லையா.   

Leave a Reply