நற்சான்று!

நற்சான்று!
நற்செய்தி : யோவான் 5:31-32.

நல்வழி:


தவற்றின் மீது தவற்றைச் செய்து,

தங்கள் திறமை எனவுரைத்தல்,

சுவற்றின் மீது வீசும் சேறாம்;

சொல்ல விரும்பா துர்ச்சான்றாம்.

எவற்றைக் கொண்டு வாழ்தல் நன்று,


என்றறிந்து வீடமைத்தல்,

கவற்றல் இல்லா அருட் பேறாம்; 


கடவுள் தருகிற நற்சான்றாம்!

ஆமென்.


-கெர்சோம் செல்லையா.

Leave a Reply