நம் நாடு, நம் மக்கள்!

நம் நாடு, நம் மக்கள்!

மக்களாட்சி என்ற பெயரில்,
மானம் விற்போர் ஆடுகிறார்.
சக்கையாக ஏழையைப் பிழிந்து
சாறை எடுத்து ஓடுகிறார்!
செக்கு மாடாய்ச் சுற்றுகின்ற
செந்தமிழ் நாட்டார் வாடுகிறார்.
எக்கு போன்று மக்கள் துணிய,
இறையின் அடியார் பாடுகிறார்!

-கெர்சோம் செல்லையா.

Leave a Reply