சாதியும் நீதியும்!
நீதியுள்ள நாட்டினிலே,
சாதியில்லையே.
சாதியுள்ள வீட்டினிலே,
நீதியில்லையே.
ஆதிநாளில் மக்களிலே,
சாதியில்லையே.
பாதியிலே மாக்களாக,
நீதியில்லையே- நம்மில்
நீதியில்லையே.
வீதிகளில் இணைகையிலே,
சாதியில்லையே.
மோதி நாம் பிணங்கையிலே,
நீதியில்லையே.
சேதி கூறும் தெய்வத்திலே,
சாதியில்லையே.
மீதி வைத்துச் செய்கையிலே,
நீதி இல்லையே- நம்மில்
நீதியில்லையே!
நீதியுள்ள நாட்டினிலே,
சாதியில்லையே.
சாதியுள்ள வீட்டினிலே,
நீதியில்லையே.
-கெர்சோம் செல்லையா.