நம்மில் நீதியில்லையே!

சாதியும் நீதியும்!

நீதியுள்ள நாட்டினிலே,

சாதியில்லையே.

சாதியுள்ள வீட்டினிலே,

நீதியில்லையே.

ஆதிநாளில் மக்களிலே,

சாதியில்லையே.

பாதியிலே மாக்களாக,

நீதியில்லையே- நம்மில்

நீதியில்லையே.

வீதிகளில் இணைகையிலே,

சாதியில்லையே.

மோதி நாம் பிணங்கையிலே,

நீதியில்லையே.

சேதி கூறும் தெய்வத்திலே,

சாதியில்லையே.

மீதி வைத்துச் செய்கையிலே,

நீதி இல்லையே- நம்மில்

நீதியில்லையே!

நீதியுள்ள நாட்டினிலே,

சாதியில்லையே.

சாதியுள்ள வீட்டினிலே,

நீதியில்லையே.

-கெர்சோம் செல்லையா.

Leave a Reply