நம்பவில்லை!

நம்பவில்லை!  
கிறித்துவின் வாக்கு: லூக்கா 24:22-24.  

கிறித்துவில் வாழ்வு:  
பெண்கள் வாக்கும் கேட்பதில்லை; 
பெரியோர் அறிவும் ஏற்பதில்லை. 
கண்கள் இருந்தும் திறப்பதில்லை. 

காரிருள் நெஞ்சும் சிறப்பதில்லை.  

நண்பா, நம்மிலும் இந்த நிலை. 
நம்ப மறுக்கும் மந்த நிலை.  

பண்பால் சிறப்பது எந்த நிலை?  
பற்றெனப் பற்றும் அந்த நிலை!
ஆமென்.  

-கெர்சோம் செல்லையா.

Leave a Reply