தொடங்குவார் பலபேர்….

தொடங்கும் பலர் முடிப்பதில்லை!கிறித்துவின் வாக்கு: லூக்கா 14:28-30.

28  உங்களில் ஒருவன் ஒரு கோபுரத்தைக் கட்ட மனதாயிருந்து,

29  அஸ்திபாரம் போட்டபின்பு முடிக்கத் திராணியில்லாமற்போனால், பார்க்கிறவர்களெல்லாரும்:

30  இந்த மனுஷன் கட்டத்தொடங்கி, முடிக்கத் திராணியில்லாமற்போனான் என்று சொல்லித் தன்னைப் பரியாசம்பண்ணாதபடிக்கு, அதைக் கட்டித் தீர்க்கிறதற்குத் தனக்கு நிர்வாகமுண்டோ இல்லையோ என்று முன்பு அவன் உட்கார்ந்து செல்லுஞ்செலவைக் கணக்குப் பாராமலிருப்பானோ?

கிறித்துவில் வாழ்வு:

தொடங்கிய பலபேர் முடிப்பதில்லை;

தொடர விரும்பியும் முடிவதில்லை.

கிடங்குகள் நிறையப் பொருளிருந்தும்,

கிறித்து இலாததால், படியவில்லை.

முடங்கிட விரும்பா கிறித்தவரோ,

முதலில் இறைவன் முடிவறிவார்.

அடங்கிய நெஞ்சு அமைந்தவராய்,

ஆண்டவர் முடிக்க, அடிநடப்பார்!

ஆமென்.

Leave a Reply