தூயவர் இரக்கம் தொடரக் கேட்போம்!

தூயவர் இரக்கம் தொடரக் கேட்போம்!
கிறித்துவின் வாக்கு; லூக்கா 1:49.

49 வல்லமையுடையவர் மகிமையானவைகளை எனக்குச் செய்தார்; அவருடைய நாமம் பரிசுத்தமுள்ளது.

கிறித்துவில் வாழ்வு:
தூயவர் இரக்கம் தொடரக் கேட்போம்;
தூய்மை வாழ்வில் படரக் கேட்போம்.
மாயம் செய்யும் மனிதர் முன்னில்,
மாண்பாய் வாழப் புனிதம் கேட்போம்.
பேயவன் வலையை அறுக்கக் கேட்போம்;
பேரரசாயினும் நொறுக்கக் கேட்போம்.
ஆயராம் இயேசு அதனைச் செய்ய,
அமைதியாக, முதலில் கேட்போம்!
ஆமென்.

Image may contain: one or more people, shoes and close-up

Leave a Reply